இடுப்பில்லாத பெண்
உதடில்லாத குடத்தை எடுத்துக்கொண்டு
கரையில்லாத ஏரிக்குச் செல்கிறாள். - அங்கு
காலில்லாத மான்
வேரில்லாத புல்லை தின்கிறது. - அதை
கையில்லாத வேடன்
மருந்தில்லாத துப்பாக்கியால் சுடுகிறான். - ஆனால்
மான் சாகவில்லை அதன்
வயிற்றிலுள்ள குட்டி தான் சாகின்றது.
அதை அறுத்து சாப்பிட்டு விட்டு
மூன்று கால் இல்லாத பந்தலில் காயபோடுகிறான்.
மூன்று நாள் கழித்த பின்னர்
முகமில்லாத நாய் அதை தூக்கிச்செல்கின்றது.
- விளக்கம் தேவை.