ஞாயிறு, 28 மே, 2017

எங்கேயோ படித்தது

இடுப்பில்லாத பெண்
உதடில்லாத குடத்தை எடுத்துக்கொண்டு
கரையில்லாத ஏரிக்குச் செல்கிறாள். - அங்கு
காலில்லாத மான்
வேரில்லாத புல்லை தின்கிறது. - அதை
கையில்லாத வேடன்
மருந்தில்லாத துப்பாக்கியால் சுடுகிறான். - ஆனால்
மான் சாகவில்லை அதன்
வயிற்றிலுள்ள குட்டி தான் சாகின்றது.
அதை அறுத்து சாப்பிட்டு விட்டு
மூன்று கால் இல்லாத பந்தலில் காயபோடுகிறான்.
மூன்று நாள் கழித்த பின்னர்
முகமில்லாத நாய் அதை தூக்கிச்செல்கின்றது.

- விளக்கம் தேவை.

சனி, 12 நவம்பர், 2016

ஓர் உழவனின் புலம்பல்

நாங்கள்
உங்களின்  உணவுகளுக்காக போராடும்
உத்தமர்கள்!

எங்களின் வியர்வையில் தான்
உதிக்கின்றன,
தித்திக்கும் பழங்களும்,
சமையுலுக்கான காய்களும்!

எத்தனையோ எதிர்ப்புகளுக்கு
மத்தியில் தான்
தயாராகின்றன,
உங்களின் உணவுக்கான
எங்களின் விளைப்பொருட்கள்!

ஆனால்,
பேரம் பேசியே
தோற்று போகிறோம்!
விளைப்பொருட்களை விற்பதற்குள்!

பேரமில்லாமல் வாங்குகின்றீர்
காய்ந்துபோன மாமிசத்தை
காசாக்கும் கடைகளினில்!

புண்ணாகி போகிறது
எங்களின் மனம்!
போட்ட முதலை எடுப்பதற்குள்!

முப்போகம் விளைவதில்லை!
தண்ணீர் பிரச்சனையால்!
சாகவும் துணிகின்றோம்!
வங்கியின்
கடனை தீர்ப்பதற்குள்!

இனியாவது தவிருங்கள்!
விளைகுறைப்பை!
உழவர் சந்தைகளில்!

சனி, 14 மார்ச், 2015

வெளிச்சம்- 2



காதல் 
அதற்கு காரணம் காதல்!
இது ஆண்டவன்
உயிர்களுக்களித்த
உன்னதமான உணர்வு!

உயிர்களுக்குள் நடக்கும்
இன்பப் புரட்சி!

சனி, 13 டிசம்பர், 2014

இளைஞனே!


இளைஞனே,
இருளாய் உள்ள நீ
பகலாய் மாறுவது
எப்பொழுது?
இந்த உலகம் ஒருநாள்
மாளும் பொழுதா?

பருவ வயது உன்னை
பகடை காயாய் உருட்டுகிறது!

வெளிச்சம் -1

செக்க சிவந்த வானம்,
செதுக்கி வைத்த சிற்பமாய் 
மலை குன்றுகள்,
பொங்கிவரும் பால்போல் 
நீர் வீழ்ச்சி !
பச்சை கம்பளம் போத்தினற்போல்
குறுங்காடுகள்!

புதன், 29 அக்டோபர், 2014

தண்ணீர் இல்லையேல் கண்ணீரே மிஞ்சும்!

தண்ணீர்!
இது உலக உயிர்களின் 
உன்னத தேவை!
ஆண்டவன் அளித்த 
அட்சய பாத்திரத்தின் 
அன்பளிப்பு !
எடுக்க எடுக்க 
குறையா செல்வம் 
இன்றோ 
எட்டா கனியாக !
நகர கடைகளில் 
விலை போகும் விபரீதம் !
மழைநீர் சேகரிப்பு,
குடிநீர் சிக்கனம்,
எங்கும் விளம்பரம்!
பாரில் உள்ளோர்
பார்த்தால் போதாது,
கடைபிடித்தல் அவசியம்!
தண்ணீர் உலக உயிர்களின்
உயிர் நாடி!
தண்ணீர் இல்லையேல்
கண்ணீரே மிஞ்சும்!

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

நெப்பந்தஸ்

அடி, ஆரணங்கே!
அமுத மொழிப்பேசி- எனை 
அரவணைப்பாய் என்றால்,
மமதையாய் பேசி என் 
மனங்கோண செய்துவிட்டாய்!       

காந்த பார்வை வீசி- என்
மனதை காணாமல் செய்தவளே !
பூக்கள் என்றாலே
வண்டுகள் சுற்ற தானே செய்யும்!

நான் பூக்களை புசிக்கும்
வண்டு அல்ல!
ரசிக்கும் வண்டு!
காதல் என்ற தேனை தேடி
நான் வந்தது
பூவாகிய உன்னை நாடி தான்!

நான் ரசிப்பதற்கென்றே
பிறந்தவளே!
என் சிந்தனை சிறைதனில்
உன்னை சிறை வைத்திருக்கிறேன்!

இனி நீ தப்புவதென்பது
தாளாத காரியம்!-  நீ
மணம் பரப்பும் மலராயிருந்து- என்
மனம்  மகிழசெய்வாய் என்றால்,
நெப்பந்தஸாய் மாறி
எனை கொல்ல பார்க்கிறாயே!                                                 

எங்கேயோ படித்தது

இடுப்பில்லாத பெண் உதடில்லாத குடத்தை எடுத்துக்கொண்டு கரையில்லாத ஏரிக்குச் செல்கிறாள். - அங்கு காலில்லாத மான் வேரில்லாத புல்லை தின்கிறது. ...