இளைஞனே,
இருளாய் உள்ள நீ
பகலாய் மாறுவது
எப்பொழுது?
இந்த உலகம் ஒருநாள்
மாளும் பொழுதா?
பருவ வயது உன்னை
பகடை காயாய் உருட்டுகிறது!
பாயும் வயதில் பருவ வயது
பயமுறுத்தத்தான் செய்யும்
பயப்படதே!
மதுவை உண்டு,
அபினை அருந்தி,
அளவில்லா மகிழ்ச்சியை
நாடும் அற்பனே!
எளியவருக்கு உதவி
ஏக்கத்தை தணித்தால்
ஏசறவின் எல்லைக்கே
செல்லலாம் என்பதை
ஏன் நீ மறந்தாய்!
படித்தும் வேலை இல்லை என்று
பழைய பல்லவியையே பாடதே!
தன்னால் முடிந்த சேவையை
சமூகத்திற்கு செய்தால்
தனக்கென்ற ஒரு வேலை
தானாகவே வரும்!
விழித்துக்கொள் இளைஞனே!
காத்துக்கொண்டிருக்கிறாள்
செல்வத் தாய் தன் விழிதிறந்து!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக