சனி, 14 செப்டம்பர், 2013

எப்பொழுதோ படித்தது!


ஒரு புலவர் ஒருவர், தன் மாணவன் ஒருவனின் புலமையை சோதிக்க எண்ணி அந்த மாணவனிடம்,
முக்காலை ஊன்றி,
மூவிரண்டுக்கு போகையிலே!
ஐந்து தலை நாகம்,
அழுந்த கடித்ததுவே! என்றார். 
அதற்கு அந்த மாணவன்,
பத்துரதன் புத்திரனின்,
சத்ருவின் மித்திரனின்,
பத்தினியின் காலெடுத்து தேய்!
என்றான். மாணவனின் பதிலை கேட்ட புலவர் அவனை பாராட்டி சென்றார்.

விளக்கம்:
 முக்கால்                  - மனிதனுக்கு இரண்டு கால் + கை தடி 
                        மூவிரண்டு              -3+2 = 6 (ஆறு )
                        ஐந்து தலை நாகம்  -யானை வணங்கி முள். (நெரிஜ முள் )
                        பத்து ரதன்                - தசரதன் 
                        புத்திரன்                     -ராமன் 
                        சத்ரு                          -ராவணன் 
                        மித்திரன்                    -வாலி 
                        பத்தினி                      - தாரை
                        பத்தினியின் கால்      -தா வுக்கு  கால் எடுத்தால் தரை.     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எங்கேயோ படித்தது

இடுப்பில்லாத பெண் உதடில்லாத குடத்தை எடுத்துக்கொண்டு கரையில்லாத ஏரிக்குச் செல்கிறாள். - அங்கு காலில்லாத மான் வேரில்லாத புல்லை தின்கிறது. ...