ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

பவுர்ணமி நிலவு

 சில்லறை காசாய்,
சிதைந்து கிடக்கும் 
நட்சத்திரங்களுக்கு நடுவே,
பவுர்ணமி நிலவு!
பிரகாசமாய்!
அவளையும் பார்த்தேன் 
அப்படித்தான்!
முழு மதியின் 
பிரகாசம் பார்த்ததில் 
தூதுகலித்தது! என் மனம்!
அவளின் முக 
வசீகரத்தில் பலிகொடுத்தேன் 
என்னை அவளிடம்!
தினமும் அவளை 
கவனித்த என்னை 
அவளும் நேசித்தாள்!
நாட்கள் நகர நகர 
பவுர்ணமி நிலவு 
பாதியாய் குறைந்தது!
என்னவளின் 
பரிசமும் தான்!
சிறிது நாட்களில் 
அரைவட்ட நிலவும் 
அம்மாவாசையானது!
என்னவள் என்னைவிட்டு 
விலகியிருந்தாள்!
முழுவதுமாக!
மறுபடி பார்த்தேன் 
பிரகாச முழுமதியை!
அவளையும் தான்!
மற்றவனின் ரசனையில்! 

                         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எங்கேயோ படித்தது

இடுப்பில்லாத பெண் உதடில்லாத குடத்தை எடுத்துக்கொண்டு கரையில்லாத ஏரிக்குச் செல்கிறாள். - அங்கு காலில்லாத மான் வேரில்லாத புல்லை தின்கிறது. ...