சனி, 13 டிசம்பர், 2014

வெளிச்சம் -1

செக்க சிவந்த வானம்,
செதுக்கி வைத்த சிற்பமாய் 
மலை குன்றுகள்,
பொங்கிவரும் பால்போல் 
நீர் வீழ்ச்சி !
பச்சை கம்பளம் போத்தினற்போல்
குறுங்காடுகள்!

பட்சிகளின் சலசலப்பு!
திரும்பும் திசை எங்கும்
இயற்கை அன்னையின்
அரவணைப்பு!
பார்ப்போர் மனம் மகிழும்
மங்களபுரம் கிராமம்!

பல ஆண்டாய் மிதியாத இவூரில்
பரிவுடன் வைத்தேன் காலை!
என் நெஞ்சில் நிறைந்தது
பழைய நினைவுகள்!
ஆனந்தன்! என் நண்பன்!
இப்பெயருக்கு சொந்தக்காரன்!

சுற்றாத இடமில்லை
அவனோடு!
தெருவில்  விளையாடும்
சின்னஞ்சிறு பிள்ளைகளை
அழவைத்து பார்ப்பது
ஆனந்தமான ஒன்று!

சுவாரசியமானது!
குளத்துக் குளியல்!
தண்ணீர் எடுக்க வரும்
தாவணி பெண்கள்
முனுமுனுபார்கள்!
எங்களை பார்த்து!

திருட்டு தேங்காய்
பறித்து திட்டு வாங்கியதும்
உண்டு!

வீட்டு தோட்டத்தில் மேயும்
ஆடு களவாகி போகும்!

வீட்டுக்குள் திருடனாய்
ஒளிந்திருக்கும் எங்களை
காட்டி கொடுப்பாள் தங்கை!

எங்களுக்கு கிடைக்கும்
வசை பாட்டிற்கு பிறகு,
கொடுதனுபுவர்கள் பணத்தை
திருடிய ஆட்டிற்கு!

அவ்வளவு நல்லவர்கள்
நாங்கள்,
எங்கள் ஊரில்!

அராஜகமான அவன்
அடங்கி போனான்
சில நாட்களில்!

அதற்கு காரணம்?

                                                                               - வளரும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எங்கேயோ படித்தது

இடுப்பில்லாத பெண் உதடில்லாத குடத்தை எடுத்துக்கொண்டு கரையில்லாத ஏரிக்குச் செல்கிறாள். - அங்கு காலில்லாத மான் வேரில்லாத புல்லை தின்கிறது. ...