காதல்
அதற்கு காரணம் காதல்!
இது ஆண்டவன்
உயிர்களுக்களித்த
உன்னதமான உணர்வு!
உயிர்களுக்குள் நடக்கும்
இன்பப் புரட்சி!
அகிம்சை வழியில் நடக்கும்
ஆனந்தமான போராட்டம்!
அவனுக்குள்ளும் அதே தான்!
அந்த அழகிய சகியை
சந்தித்தது ஓர்
சரணாலயத்தில்!
அவன் மனது
சரணடைந்ததும் அவ்விடந்தான்!
காட்சியளித்தாள் பிரமாதமாய்
ப்பேர் அன்ட் லவ்லி பளபளப்பில்!
அவள் சித்திர நெற்றியில்
சின்னதாய் ஒரு பொட்டு!
பச்சரிசி பற்களுக்கு
வெளியில் பவழமாய்
இரண்டு இதழ்கள்!
ஜொலிக்கும் ஓர் இழை
தங்க சங்கிலி!
சிகப்பு மஞ்சள்
பாவாடை தாவணி!
மான் கண்டு மான்கள்
மிரளுமோ!
இங்கே மிரண்டது!
வேலிக்கு வெளியே- இவள்
கொலுசொலி கேட்டு,
உள்ளிருக்கும் மான்கள்
மிரச்சியில் உறைந்தன!
அவள் அழகு அவனை
ஆச்சரியத்தில் ஆழ்த்தியது!
அவன் மனதை கொள்ளை
கொண்ட அவள் - என்
மனதையும் ஆட்கொண்டாள்
என்பதென்னவோ உண்மைதான்!
அடுத்து அவன்
மனதிற்கினிய மங்கையை
பார்த்தது மகாபலிபுரம்
கடற்கரை கோவிலில்!
-வளரும்
Thodarum
பதிலளிநீக்கு