சனி, 12 நவம்பர், 2016

ஓர் உழவனின் புலம்பல்

நாங்கள்
உங்களின்  உணவுகளுக்காக போராடும்
உத்தமர்கள்!

எங்களின் வியர்வையில் தான்
உதிக்கின்றன,
தித்திக்கும் பழங்களும்,
சமையுலுக்கான காய்களும்!

எத்தனையோ எதிர்ப்புகளுக்கு
மத்தியில் தான்
தயாராகின்றன,
உங்களின் உணவுக்கான
எங்களின் விளைப்பொருட்கள்!

ஆனால்,
பேரம் பேசியே
தோற்று போகிறோம்!
விளைப்பொருட்களை விற்பதற்குள்!

பேரமில்லாமல் வாங்குகின்றீர்
காய்ந்துபோன மாமிசத்தை
காசாக்கும் கடைகளினில்!

புண்ணாகி போகிறது
எங்களின் மனம்!
போட்ட முதலை எடுப்பதற்குள்!

முப்போகம் விளைவதில்லை!
தண்ணீர் பிரச்சனையால்!
சாகவும் துணிகின்றோம்!
வங்கியின்
கடனை தீர்ப்பதற்குள்!

இனியாவது தவிருங்கள்!
விளைகுறைப்பை!
உழவர் சந்தைகளில்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எங்கேயோ படித்தது

இடுப்பில்லாத பெண் உதடில்லாத குடத்தை எடுத்துக்கொண்டு கரையில்லாத ஏரிக்குச் செல்கிறாள். - அங்கு காலில்லாத மான் வேரில்லாத புல்லை தின்கிறது. ...