அடி, ஆரணங்கே!
காந்த பார்வை வீசி- என்
அமுத மொழிப்பேசி- எனை
அரவணைப்பாய் என்றால்,
மமதையாய் பேசி என்
மனங்கோண செய்துவிட்டாய்!
காந்த பார்வை வீசி- என்
மனதை காணாமல் செய்தவளே !
பூக்கள் என்றாலே
வண்டுகள் சுற்ற தானே செய்யும்!
நான் பூக்களை புசிக்கும்
வண்டு அல்ல!
ரசிக்கும் வண்டு!
காதல் என்ற தேனை தேடி
நான் வந்தது
பூவாகிய உன்னை நாடி தான்!
நான் ரசிப்பதற்கென்றே
பிறந்தவளே!
என் சிந்தனை சிறைதனில்
உன்னை சிறை வைத்திருக்கிறேன்!
இனி நீ தப்புவதென்பது
தாளாத காரியம்!- நீ
மணம் பரப்பும் மலராயிருந்து- என்
மனம் மகிழசெய்வாய் என்றால்,
நெப்பந்தஸாய் மாறி
எனை கொல்ல பார்க்கிறாயே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக