சனி, 13 டிசம்பர், 2014

இளைஞனே!


இளைஞனே,
இருளாய் உள்ள நீ
பகலாய் மாறுவது
எப்பொழுது?
இந்த உலகம் ஒருநாள்
மாளும் பொழுதா?

பருவ வயது உன்னை
பகடை காயாய் உருட்டுகிறது!

வெளிச்சம் -1

செக்க சிவந்த வானம்,
செதுக்கி வைத்த சிற்பமாய் 
மலை குன்றுகள்,
பொங்கிவரும் பால்போல் 
நீர் வீழ்ச்சி !
பச்சை கம்பளம் போத்தினற்போல்
குறுங்காடுகள்!

புதன், 29 அக்டோபர், 2014

தண்ணீர் இல்லையேல் கண்ணீரே மிஞ்சும்!

தண்ணீர்!
இது உலக உயிர்களின் 
உன்னத தேவை!
ஆண்டவன் அளித்த 
அட்சய பாத்திரத்தின் 
அன்பளிப்பு !
எடுக்க எடுக்க 
குறையா செல்வம் 
இன்றோ 
எட்டா கனியாக !
நகர கடைகளில் 
விலை போகும் விபரீதம் !
மழைநீர் சேகரிப்பு,
குடிநீர் சிக்கனம்,
எங்கும் விளம்பரம்!
பாரில் உள்ளோர்
பார்த்தால் போதாது,
கடைபிடித்தல் அவசியம்!
தண்ணீர் உலக உயிர்களின்
உயிர் நாடி!
தண்ணீர் இல்லையேல்
கண்ணீரே மிஞ்சும்!

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

நெப்பந்தஸ்

அடி, ஆரணங்கே!
அமுத மொழிப்பேசி- எனை 
அரவணைப்பாய் என்றால்,
மமதையாய் பேசி என் 
மனங்கோண செய்துவிட்டாய்!       

காந்த பார்வை வீசி- என்
மனதை காணாமல் செய்தவளே !
பூக்கள் என்றாலே
வண்டுகள் சுற்ற தானே செய்யும்!

நான் பூக்களை புசிக்கும்
வண்டு அல்ல!
ரசிக்கும் வண்டு!
காதல் என்ற தேனை தேடி
நான் வந்தது
பூவாகிய உன்னை நாடி தான்!

நான் ரசிப்பதற்கென்றே
பிறந்தவளே!
என் சிந்தனை சிறைதனில்
உன்னை சிறை வைத்திருக்கிறேன்!

இனி நீ தப்புவதென்பது
தாளாத காரியம்!-  நீ
மணம் பரப்பும் மலராயிருந்து- என்
மனம்  மகிழசெய்வாய் என்றால்,
நெப்பந்தஸாய் மாறி
எனை கொல்ல பார்க்கிறாயே!                                                 

ஞாயிறு, 6 ஜூலை, 2014

இன்பம்


அணைத்து மலர்களும்
ஒரே இடத்தில்!
இன்பத்தில் வண்டுகள்!

துக்க தோரணையில்
நண்பர் உறவினர்களுடன்,
சவ அலங்காரவண்டி!

                                    மு. நீலமேகம் 

கவிதைகள்


வார்த்தைகள் தங்களை
மெருகேற்றிக்கொள்கின்றன!

                                                        - மு. நீலமேகம்  

பலியாடுகள்



புசிக்கப்படும் முன்
பசியாற்றிக் கொள்கிறது !

                                             

ஞாயிறு, 29 ஜூன், 2014

கண்ணத்தில் முத்தமிடு!

மந்திர விழியால் 
மயக்கிய என்னை -உன் 
சுந்திர தமிழால் 
சுண்டிழுத்து விட்டாய்! - அடி,
சித்திரச்சிலையே - உனை 
தொட்டது தவறுதான்- அதற்காக
அந்நியனை பார்ப்பதுபோல்
ஆத்திரத்துடன் பார்க்கிறாயே!- உன் 
நீள்விழி பார்வையை என் மீது
நிலைநிறுத்த மாட்டாயோ!
காட்டிய கோபம்
போதும் கண்ணே!
கருணை கொள்வது எப்போது?
ஈட்டி சொல்லால் குத்தி- எனை 
இம்சை கொள்ள செய்யாதே!
கட்டி அனைத்துக்கொள்- கிளியே 
கண்ணத்தில் முத்தமிடு!
                            

எங்கேயோ படித்தது

இடுப்பில்லாத பெண் உதடில்லாத குடத்தை எடுத்துக்கொண்டு கரையில்லாத ஏரிக்குச் செல்கிறாள். - அங்கு காலில்லாத மான் வேரில்லாத புல்லை தின்கிறது. ...