திங்கள், 2 டிசம்பர், 2013

ஒற்றுமை

ஆண்டவன் அரவணைப்பில் 
அனைவரும் வளரும் போது 
சாதிகள் எதற்கு?
மதங்கள் எதற்கு?
தூண்டிவிட்டால்  எரிவது 
விளக்கு திரி மட்டுமே!
தூண்டுகோள் அல்ல!
மக்களை தூண்டிவிட்டு 
லாபம் காண்பவர்கள் 
அரசியல்வாதிகளும்,
தீவிரவாதிகளும் தான்!
ஆனால் உங்களுக்கோ,
வெட்டும், குத்தும் 
மிஞ்சினால் உயிர் கூட!
சாதி என்னும் 
சாக்கடையில் புரளாதீர்கள்!
அனைவரும் சமம் என்று 
அறத்துடன் நடந்துகொள்ளுங்கள்!
மதம் மதம் என்று 
மதம் பிடித்து அலையாதீர்கள்! 
ஆண்டவனை அடைய 
பெரியோர்கள் 
வகுத்த வழிகள் அவைகள் 
அனைத்தும் செல்வது அவரிடமே!
ஒற்றுமை என்பது 
உலக இன்பத்தின் படிக்கட்டுகள்!
ஒற்றுமையுடன் வாழ்ந்தால்
உயர்வது நிச்சயம்!                      

சனி, 28 செப்டம்பர், 2013

மரங்கள்


வின்னிண் துளிகள் 
விரக்தி அடைகின்றன!
வெட்டுப்படும் மரங்கள்!

                       - மு. நீலமேகம் 

அழகி


அவள் அழகிதான்,
அழகிய முகம் 
கூரிய கண்களால் அல்ல!
மிகுந்த அறிவால்!
                              - மு. நீலமேகம் 

சனி, 14 செப்டம்பர், 2013

எப்பொழுதோ படித்தது!


ஒரு புலவர் ஒருவர், தன் மாணவன் ஒருவனின் புலமையை சோதிக்க எண்ணி அந்த மாணவனிடம்,
முக்காலை ஊன்றி,
மூவிரண்டுக்கு போகையிலே!
ஐந்து தலை நாகம்,
அழுந்த கடித்ததுவே! என்றார். 
அதற்கு அந்த மாணவன்,
பத்துரதன் புத்திரனின்,
சத்ருவின் மித்திரனின்,
பத்தினியின் காலெடுத்து தேய்!
என்றான். மாணவனின் பதிலை கேட்ட புலவர் அவனை பாராட்டி சென்றார்.

விளக்கம்:

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

அன்னையே

அன்னையே! 
ஆதிலட்சுமி ருபீனியே!
இன்னல்களை போக்கி,
ஈதலுக்கு உதவி,
உத்தமர் வாழ்வுதன்னை,
ஊர்போற்ற வரமளித்து, 
எவர் போற்றும் செல்வம்தன்னை,
ஏழைக்கும் பங்களித்து,
ஐயம் தகர்த்தெறிவாய்,
ஒருசேர் பரம்பொருளே!
ஓங்கார ருபீனியே!
ஒளடதமே! உனை பணிந்தேன்!
அஃதெனக்கே அருள்வாயே!

பவுர்ணமி நிலவு

 சில்லறை காசாய்,
சிதைந்து கிடக்கும் 
நட்சத்திரங்களுக்கு நடுவே,
பவுர்ணமி நிலவு!
பிரகாசமாய்!
அவளையும் பார்த்தேன் 
அப்படித்தான்!
முழு மதியின் 
பிரகாசம் பார்த்ததில் 
தூதுகலித்தது! என் மனம்!
அவளின் முக 
வசீகரத்தில் பலிகொடுத்தேன் 
என்னை அவளிடம்!
தினமும் அவளை 
கவனித்த என்னை 
அவளும் நேசித்தாள்!
நாட்கள் நகர நகர 
பவுர்ணமி நிலவு 
பாதியாய் குறைந்தது!
என்னவளின் 
பரிசமும் தான்!
சிறிது நாட்களில் 
அரைவட்ட நிலவும் 
அம்மாவாசையானது!
என்னவள் என்னைவிட்டு 
விலகியிருந்தாள்!
முழுவதுமாக!
மறுபடி பார்த்தேன் 
பிரகாச முழுமதியை!
அவளையும் தான்!
மற்றவனின் ரசனையில்! 

                         

திங்கள், 2 செப்டம்பர், 2013

சலங்கை ஒலி

உன் பாத ஒலிகளே 
என் காதுகளை 
பதம் பார்த்து விடுகின்றனவே!
அப்படி இருக்க,
சலசலக்கும் 
சலங்கை எதற்கு?

                

எங்கேயோ படித்தது

இடுப்பில்லாத பெண் உதடில்லாத குடத்தை எடுத்துக்கொண்டு கரையில்லாத ஏரிக்குச் செல்கிறாள். - அங்கு காலில்லாத மான் வேரில்லாத புல்லை தின்கிறது. ...