ஆண்டவன் அரவணைப்பில்
அனைவரும் வளரும் போது
சாதிகள் எதற்கு?
மதங்கள் எதற்கு?
தூண்டிவிட்டால் எரிவது
விளக்கு திரி மட்டுமே!
தூண்டுகோள் அல்ல!
மக்களை தூண்டிவிட்டு
லாபம் காண்பவர்கள்
அரசியல்வாதிகளும்,
தீவிரவாதிகளும் தான்!
ஆனால் உங்களுக்கோ,
வெட்டும், குத்தும்
மிஞ்சினால் உயிர் கூட!
சாதி என்னும்
சாக்கடையில் புரளாதீர்கள்!
அனைவரும் சமம் என்று
அறத்துடன் நடந்துகொள்ளுங்கள்!
மதம் மதம் என்று
மதம் பிடித்து அலையாதீர்கள்!
ஆண்டவனை அடைய
பெரியோர்கள்
வகுத்த வழிகள் அவைகள்
அனைத்தும் செல்வது அவரிடமே!
ஒற்றுமை என்பது
உலக இன்பத்தின் படிக்கட்டுகள்!
ஒற்றுமையுடன் வாழ்ந்தால்
உயர்வது நிச்சயம்!