ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014

நெப்பந்தஸ்

அடி, ஆரணங்கே!
அமுத மொழிப்பேசி- எனை 
அரவணைப்பாய் என்றால்,
மமதையாய் பேசி என் 
மனங்கோண செய்துவிட்டாய்!       

காந்த பார்வை வீசி- என்
மனதை காணாமல் செய்தவளே !
பூக்கள் என்றாலே
வண்டுகள் சுற்ற தானே செய்யும்!

நான் பூக்களை புசிக்கும்
வண்டு அல்ல!
ரசிக்கும் வண்டு!
காதல் என்ற தேனை தேடி
நான் வந்தது
பூவாகிய உன்னை நாடி தான்!

நான் ரசிப்பதற்கென்றே
பிறந்தவளே!
என் சிந்தனை சிறைதனில்
உன்னை சிறை வைத்திருக்கிறேன்!

இனி நீ தப்புவதென்பது
தாளாத காரியம்!-  நீ
மணம் பரப்பும் மலராயிருந்து- என்
மனம்  மகிழசெய்வாய் என்றால்,
நெப்பந்தஸாய் மாறி
எனை கொல்ல பார்க்கிறாயே!                                                 

எங்கேயோ படித்தது

இடுப்பில்லாத பெண் உதடில்லாத குடத்தை எடுத்துக்கொண்டு கரையில்லாத ஏரிக்குச் செல்கிறாள். - அங்கு காலில்லாத மான் வேரில்லாத புல்லை தின்கிறது. ...