புதன், 29 அக்டோபர், 2014

தண்ணீர் இல்லையேல் கண்ணீரே மிஞ்சும்!

தண்ணீர்!
இது உலக உயிர்களின் 
உன்னத தேவை!
ஆண்டவன் அளித்த 
அட்சய பாத்திரத்தின் 
அன்பளிப்பு !
எடுக்க எடுக்க 
குறையா செல்வம் 
இன்றோ 
எட்டா கனியாக !
நகர கடைகளில் 
விலை போகும் விபரீதம் !
மழைநீர் சேகரிப்பு,
குடிநீர் சிக்கனம்,
எங்கும் விளம்பரம்!
பாரில் உள்ளோர்
பார்த்தால் போதாது,
கடைபிடித்தல் அவசியம்!
தண்ணீர் உலக உயிர்களின்
உயிர் நாடி!
தண்ணீர் இல்லையேல்
கண்ணீரே மிஞ்சும்!

எங்கேயோ படித்தது

இடுப்பில்லாத பெண் உதடில்லாத குடத்தை எடுத்துக்கொண்டு கரையில்லாத ஏரிக்குச் செல்கிறாள். - அங்கு காலில்லாத மான் வேரில்லாத புல்லை தின்கிறது. ...