மந்திர விழியால்
மயக்கிய என்னை -உன்
சுந்திர தமிழால்
சுண்டிழுத்து விட்டாய்! - அடி,
சித்திரச்சிலையே - உனை
தொட்டது தவறுதான்- அதற்காக
அந்நியனை பார்ப்பதுபோல்
ஆத்திரத்துடன் பார்க்கிறாயே!- உன்
நீள்விழி பார்வையை என் மீது
நிலைநிறுத்த மாட்டாயோ!
காட்டிய கோபம்
போதும் கண்ணே!
கருணை கொள்வது எப்போது?
ஈட்டி சொல்லால் குத்தி- எனை
இம்சை கொள்ள செய்யாதே!
கட்டி அனைத்துக்கொள்- கிளியே
கண்ணத்தில் முத்தமிடு!